சென்னை:-
நடிகை சனம் ஷெட்டிக்கு சமூக வலைதளத்தில் ஆபாச மெசேஜ்களை அனுப்பிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் அதிகமான நடித்து, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி.
இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாக கூறி அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார்.
இந்நிலையில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை அடையாறு சைபர் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைக்கு பிறகு திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது திருவான்மியூர் போலீசார் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.