தேசிய விருது வென்ற சேகர் கம்முலாவுடன் தனுஷ் இணைந்துள்ள முதல் நேரடி தெலுங்கு படம் ‘பான்-இந்தியா’ படமாக உருவாக உள்ளது.
இந்நிலையில், தனது இரண்டாவது நேரடி தெலுங்கு படத்தில் தனுஷ் கமிட் ஆகி இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கும் ‘டி43’ என பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது தனது முதல் நேரடி தெலுங்கு படத்திற்காக இயக்குநர் சேகர் கம்முலாவையும், தயாரிப்பாளர் நாராயணன் தாஸ் நரங்கையும் சந்தித்து பேசினார் தனுஷ்.
இதே படப்பிடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் தயாரிப்பாளரான சீதாரா என்டர்டெயின்மென்ட்ஸின் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சியையும் தனுஷை சந்தித்துள்ளார். இந்த கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிப்பதற்கு தனுஷ் ஒப்புக்கொண்டதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் வெளியிட தீர்மானித்துள்ளனராம். இதன் மூலம் இரண்டும் நேரடி தெலுங்கு படங்கள் மூலம் டோலிவுட்டில் என்ட்ரி ஆகிறார் தனுஷ்.