இந்தியா

மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 44 பேர் உயிரிழப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்துவருவதால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக இன்று காலை பெய்த கனமழை காரணமாக ரெய்காட் மாவட்டத்தில் மலாய் மற்றும் தலாய் கிராமங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் மண் குவியலில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  128 ஆண்டுகளுக்குப்பின் மூடப்பட்ட கோவில்.....
Maharashtra Rain Updates : Heavy rains in many areas of Maharashtra, 5 people  died in Raigad, NDRF's major rescue operation in Kolhapur | महाराष्ट्र के  कई इलाकों में बारिश से लोग बेहाल,

சதாரா மாவட்டத்தில் பெய்த கனமழையால் 8 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேரை காணவில்லை. மீட்பு பணிகளை பார்வையிட்ட அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மீட்புப்பணிகளை தீவிரப்படுத்த குழுக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

36 dead in landslides in Maharashtra's Raigad district, over 30 feared  trapped - India News

அதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேவையான உதவிகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குஜராத்தில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிரா- உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ ..!

naveen santhakumar

கவர்னரிடம் ஸ்டாலின் அளித்த 97 பக்கம் கொண்ட ஊழல் புகார் :

naveen santhakumar

அமேசானுக்கு ஆப்பு வைத்த சட்ட கல்லூரி மாணவன் ! 

News Editor