இந்தியாவில் கொரானா தொற்று காரணமாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தி இருந்தார்கள்.
இந்த சூழலை பயன்படுத்தி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகவலை பச்சன் பச்சோ அந்தோலன் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஆவார். இவர் குழந்தைகள் உரிமைக்காக பச்சன் பச்சோ அந்தோலன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இந்த அமைப்பு குழந்தைகள் கடத்தல் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 2020 ஏப்ரல் முதல் 2021 ஜூன் முடிய உள்ள காலத்தில் இந்தியாவில் கடத்தப்பட்ட 9 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது.
இந்த குழந்தைகள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பது தான் அதிர்ச்சிகரமான தகவல் ஆகும்.
இந்த அமைப்பின் ஆய்வின்படி பள்ளிகள் செயல்படாத காரணத்தாலும், பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டதன் காரணமாகும், பள்ளிகள் செயல்படாத காரணத்தால், குழந்தைகள் பள்ளி இடைநிற்றல் காரணமாகவும் குழந்தை தொழிலாளர்களாக மாறி உள்ளனர் என்ற தகவலையும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.