வாஷிங்டன்
கொரோனா தொற்று அமெரிக்காவில் சிறுவர்களிடம் அதிவேகமாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் தற்போது கொரோனா தொற்றின் 4ம் அலையில் சிறார்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் இடையே தொற்று அதிகரித்து வருவதாக மருத்துவத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக தொற்றுநோய் தடுப்பு நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் தெரிவித்தார்.
தற்போது கொரோனா தொற்று பாதிப்பு உள்ளாகி இருக்கும் சிறுவர்களில் 90 சதம் இந்த வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு கிடைக்கும் தகவல்களும் அதனை உறுதி செய்கின்றன. எனவே பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களிடம் டெல்டா வகை வைரஸ் தொற்று அதிகம் காணப்படுகிறது என டாக்டர் ஜேம்ஸ்தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.