நியூயார்க்:-
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக டெஸ்லா கார் நிறுவன அதிபர் எலான் மஸ்க் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கொரோனா குறித்த புத்தகம் ஒன்றை தனது விற்பனை தளத்தில் இருந்து அமேசான் நீக்கிவிட்டதாக எழுத்தாளர் அலெக்ஸ் பெரென்சன் கூறிய புகாரின் எதிரொலியாக, எலான் மஸ்க் இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
அலெக்ஸ் பெரென்சன் (Alex Berenson) கொரோனா வைரஸ் குறித்து எழுதிய புத்தகம் முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி அமேசான் கிண்ட்ல் (Amazon Kindle) பக்கத்திலிருந்து பக்கத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறி ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் எலான் மஸ்க்:-
இது பைத்தியக்காரத்தனம். ஆனது அமேசான் போன்று ஒரு துறையில் ஒரே நிறுவனத்தின் ஏகாதிபத்தியம் இருப்பது தவறு என தெரிவித்துள்ளார்.
அதே சமயம், அந்த புத்தகம் தவறுதலாக நீக்கப்பட்டு பின்னர் விற்பனை தளத்தில் சேர்க்கப்பட்டு விட்டதாக அமேசான் விளக்கம் அளித்துள்ளது.