இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை 27-ம் தேதி உயிரிழந்ததாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டும் பெண் பலியானது தொடர்பாக அவருடைய மரபணுவை வைத்து சோதனை செய்யப்பட்டுள்ளது. அதனுடைய முடிவுகள் தற்போது தான் கிடைத்துள்ளனர். அதன்படி அவர் டெல்டா பிளஸ் கொரோனா மாறுபட்டால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும், மரணமடைந்த பெண் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு எங்கும் பயணம் செய்யாமல் இருந்துள்ளார். எனினும், அவருக்கு நுரையீரலில் பாதிப்பு இருந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குவதற்கு முன்பாகவே அவர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.