ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானத்தை தவறுதலாக சுட்டுவிழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது.
இதை கண்டித்து டெஹ்ரானில் உள்ள அமீர் கபீர் பல்கலைகழகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் பங்கேற்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுடன் சேர்த்து பிரிட்டன் தூதரையும் சேர்த்து பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
எனினும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன், ஈரான் சர்வதேச விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
1963 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வியன்னா ஒப்பந்தத்தின் படி தூதர்களை எந்த விதத்திலும் கைது செய்யகூடாது. குற்றவியல் வழக்குகளிலிருந்து விலக்கு உண்டு என கூறுகிறது. எனினும் தூதர்களும் தன் வரம்பு மீற கூடாது என்பதையும் உணரந்து செயல்பட வேண்டும்.