சினிமா

உள்ளூர் கேபிள் டி.வியில் வெளியான தர்பார் திரைப்படம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லைக்கா நிறுவன தயாரிப்பில் பெரும் பொருட் செலவில் உருவான ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம், கடந்த 9ம் தேதி திரைக்கு வந்தது. இளம் வயதில் தனது மனைவியை இழந்த கதாநாயகன், அநியாயத்தை வேரோடு வெட்டி வீழ்த்தும் போலீஸ் அதிகாரியாக எதிரிகளை தனது பாணியில் துவம்சம் செய்வதே தர்பாரின் கதை.இதுவரை தமிழ் திரைப்படங்களில் வராத அபூர்வ கதை இல்லைதான்.

ஆனால் நடித்தது ரஜினிகாந்த். 40 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் அபிமானத்தை ஒருவரால் எப்படி தக்கவைக்க முடிகிறது என்பது இந்த திரைப்படத்தில் பல காட்சிகளில், அவரது ஸ்டைல், காமெடி மற்றும் வசனங்கள் புரிய வைக்கும்.

ரஜினி ஏ. ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் தர்பார் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். அனிருத் இசையில் பிரம்மாண்டமாக லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ALSO READ  தியேட்டர்கள் திறக்க தடை: ரசிகர்கள் ஏமாற்றம்!

இந்நிலையில் மதுரை திருமங்கலம் பகுதியில், உள்ளூர் கேபிளில் நேற்று நள்ளிரவு தர்பார் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை, லைக்கா நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, லைக்கா நிறுவனம் சார்பில், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

12 வருடகால காத்திருப்பு  “தங்கம்” படத்தின் வெற்றியால் மனம் நெகிந்த சாந்தனு..!

News Editor

விஜய் சேதுபதியின் “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது 

News Editor

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து …!

naveen santhakumar