தமிழகம்

சென்னை மழை, வெள்ளம்: உதவி எண்கள் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 29/11/15 - 6/12/15

சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியான ஆலந்தூர், பழவந்தாங்கல், விமான நிலையம், பல்லாவரம்,தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மி.மீ. அளவை தாண்டி மழை பெய்துள்ளது.

ALSO READ  "இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது"

முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். வீடுகளில் மழை நீர் சுழ்ந்ததால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதி அடைந்துள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக உதவிகள் மற்றும் புகார்களுக்கு 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் . மேலும் 9445477205 எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல்களை தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆண்டிபட்டியில் அதிர்ச்சி; குளிக்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம் !

News Editor

மாமியார் மற்றும் மனைவியின் டார்ச்சரால் இறந்த கணவன்:

naveen santhakumar

தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமாக உள்ளது – நிதி அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்

News Editor