தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், 24 மணி நேர மின்சார வசதி, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, மருந்துகள் வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் பெண்களுக்கான தொகை என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தலின் போது மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகையாக வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.