போகி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
போகி பண்டிகை அன்று வீட்டில் தேவையற்ற பழைய பொருட்களை மக்கள் தீவைத்து கொளுத்துவது வழக்கம். இந்நிலையில் பிளாஸ்டிக், டயர்கள் போன்ற பொருள்களை எரித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து மண்டலங்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதை முற்றிலும் தடுக்கும் விதமாக முதன் முறையாக சென்னை மாநகராட்சி அபராதத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.