நாட்டிற்கு எதிராக செய்திகளை பரப்பியதாக 35 யூ-டியூப் சேனல்கள், வலைதள பக்கங்கள், சமூக வலைத்தள பக்கங்கள் ஆகியவற்றை மத்திய அரசு முடக்கியுள்ளது.
உளவுத்துறையின் பரிந்துரையின் பேரில் நாட்டிற்கு எதிராக போலி செய்திகளை பரப்பியதாக 35 யூ-டியூப் சேனல்கள், 2 இணையதளங்கள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 2 ட்விட்டர் கணக்குகள் மற்றும் ஒரு பேஸ்புக் கணக்கு ஆகியவற்றை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியுள்ளது.
இவை அனைத்துமே பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த கணக்குகள் என்று உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கணக்குகள் எல்லாம் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களுடன் இயங்கும் இணையதளங்கள், யூ-டியூப் சேனல்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.