சென்னை
கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று அங்குள்ள மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு சென்னை திரும்பினார். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு படத்தித்தின் இறுதி காட்சிகளை முடித்து கொடுத்தார்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 25ம் தேதி குடும்பத்தினருடன் புதுடெல்லி சென்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் தாதா சாகேப் பால்கே விருதைபெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார்.
தொடர்ந்து அண்ணாத்த படத்தின் பிரத்யேக காட்சியை ரஜினிகாந்த் தந்து குடும்பத்தினருடன் நேற்று சென்று பார்த்தார்.
இந்நிலையில் நேற்றுஇரவு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது நடிகர் ரஜினிகாந்த்க்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். ரஜினிகாந்தின் உடல்நிலை கவலைப்படும்படியாக எதுவும் இல்லை என்றுமருத்துவர்கள் தெரிவித்தனர்.