தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
உதகையில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை உள்பட 19 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மலைப் பகுதியில் பெய்யும் தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து ரயில் வழித்தடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூர் – ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.