மராட்டிய மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் நிர்வாண மாடலாக தமிழ் பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.
அவரது பெயர் தனலட்சுமி மணி முதலியார். இவருக்கு ஐந்து வயதாக இருக்கும்போது குடும்பத்துடன் மும்பையில் குடியேறியுள்ளார். 14 வயதில் திருமணம் செய்துகொண்ட அவருக்கு முதலில் மகன் பிறந்துள்ளான்.
பின்னர் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் தனலட்சுமி கர்ப்பம் அடைந்த நிலையில் அவரது கணவர் மணி மரணமடைந்தார். இதனால் குடும்பத்தின் முழு பொறுப்புகளும், குழந்தையை வளர்க்க வேண்டிய கட்டாயமும் தனலட்சுமி துரத்தின.
இந்நிலையில் கலைக் கல்லூரி ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ராஜம்மா என்பவர் தனலட்சுமி க்கு அறிமுகமாகியுள்ளார். கல்லூரியில் நிர்வாண மாடலாக பணியாற்றிவரும் ராஜம்மா தனலட்சுமியும் நிர்வாணமாக மாடலாக பணியாற்ற அழைத்துள்ளார். முதலில் மறுத்த தனலட்சுமி ராஜம்மாவின் கட்டாயத்தின் பேரில் நிர்வாணமாக மாடலாக இருக்க சம்மதித்தார்.
25 வருடங்களாக இந்தப் பணியைச் செய்துவரும் தனலட்சுமி நிர்வாணமாக தன்னை வரைய ரூபாய் ஆயிரமும், ஆடையுடன் வரைய ரூபாய் 400 ஊதியமாக பெற்று வருகிறார். ஆனால் இதுபற்றி தனது குழந்தைகளிடம் இதுவரை அவர் தெரிவித்தது இல்லை எனவும் கூறியுள்ளார்.