அரசியல் இந்தியா

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீஹாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் வகுப்பதில் வல்லவர் எனக் கூறப்படுபவர். இவர் மீது தற்போது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் வெற்றிக்குக் காரணமானவர் எனக் கூறப்படுபவர்.

தற்போது தி.மு.க-ன் வெற்றிக்காக ஒப்பந்தம் போட்டுள்ளார். இவர் மீது சாஸ்வத் கௌதம் என்ற இளைஞர் பாட்டலிபுரா காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

ALSO READ  அதிமுகவை எதிர் கொள்ள ஸ்டாலினுக்கு சக்தி இல்லை; முதல்வர் பழனிச்சாமி !

அதில் பாத் பீகார் கி (Baat Bihar Ki) என்னும் பெயரிலான தன்னுடைய கருத்துருவைப் பிரசாந்த் கிஷோர் திருடிப் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கருத்துருவை பிரசாந்த் கிஷோரிடம் தாம் அளித்ததாகவும், இதை தனது நண்பர் ஒசாமா என்பவருடன் இணைத்து உருவாக்கியதாக சாஸ்வத் கூறினார்.

ALSO READ  Glory Casino İncelemesi Türkiye'nin En İyi Casino Sites

இதையடுத்து ஏமாற்றுதல் (420), நம்பிக்கைத் துரோகம் செய்தல் (406) ஆகிய பிரிவுகளில் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘பாத் பீகார் கி’ என்பது பீஹாரை நாட்டின் 10 முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்காகப் பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் இயக்கமாகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெறும் 500 ரூபாய் இருந்தால் போதும் – போலாமா Jail Tour

naveen santhakumar

ரயில் விபத்து.. மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர்..

Shanthi

கேரளாவில் பச்சை கருவுடன் முட்டையிடும் அதிசய கோழிகள்- ஆய்வைத் தொடங்கிய விஞ்ஞானிகள்…

naveen santhakumar