காலேஜ் வாசலிலேயே பேராசிரியை ஒருவரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துள்ள சம்பவம் மகாராஷ்ரா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்ரா மாநிலம் வார்தா பகுதியில் உள்ள கல்லூரியில் 25 வயதான இளம்பெண் ஒருவர் பேராசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
காலேஜுக்கு பஸ்ஸில் செல்லும் இவர், பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்து சென்றுள்ளார்…
அப்போது திடீரென பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை வழி மறித்து, கையில் கொடு வந்திருந்த பெட்ரோலை எடுத்து டீச்சர் மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இளம்பெண்ணின் உடல் முழுவது தீப்பற்றி எறிய, பஸ்ஸில் இருந்த பயணிகள் இதை பார்த்து உடனடியாக இறங்கி ஓடிவந்தனர்.. அந்த பகுதியில் இருந்த தண்ணீரை அள்ளி கொண்டு வந்து டீச்சர் மீது ஊற்றி அணைத்து, மருத்துமணையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கையில், டீச்சருக்கு கல்யாணம் ஆகி 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளதும், கல்யாணம் ஆனது தெரிந்தும் விக்கி நாக்ரலே என்பவர் டீச்சரை விரட்டி விரட்டி காதலித்து லவ் டார்ச்சர் செய்தது தெரிய வந்துள்ளது.
மேலும் டீச்சர் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறது என பலமுறை சொல்லியும் அந்த இளைஞர் காதலிக்கும்படியும், கல்யாணம் செய்து கொள்ளும்படியும் கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்தால் ஆத்திரமடைந்த இளைஞன் பேராசிரியை பெட்ரேலை ஊற்றி எரித்துள்ளார். லவ் டார்ச்சர் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.