தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஆந்திராவில் பிச்சையெடுக்கும் முதியவர் ஒருவர் கோவிலுக்கு ரூ.8 லட்சம் நன்கொடை வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திராவின் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் யாதி ரெட்டி. இவர் முதலில் ரிக்ஷா ஓட்டி வந்துள்ளார். ஆனால் வயது மூப்பு காரணமாக ஒரு கட்டத்தில் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சையெடுக்க தொடங்கினார்.
அதில் வரும் பணத்தை சேமித்து வைக்க தொடங்கியுள்ளார். 7 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வந்த அவர் செய்த செயல் யாரும் எதிர்பாராதது.
சமீபத்தில் அங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு ரூ.8 லட்சம் பணத்தை நன்கொடையாக அளித்துள்ளார் யாதிரெட்டி.
ஒரு பிச்சைக்காரர் இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக அளித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.