தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் வேளையில் பெரும்பாலான இடங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.21 மையங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 33 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
டெல்லியில் மீண்டும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.