நடிகை அமலாபால் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால் 2010 ஆம் ஆண்டு வெளியே வந்த மைனா திரைப்படம் மூலம் தான் தமிழ் திரையுலகில் பாராட்டை பெற்றார்.
பின்பு தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.இப்படி தொடர்ந்து பல படங்களில் நடிக்க வந்த அமலா பால் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்ய ஆரம்பித்தார்.
அந்த வகையில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஆடை’ திரைப்படம் அவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத் தந்தது. தற்போது ‘அதோ அந்த பறவை போல’ என்ற திரைப்படத்தில் அமலாபால் நடித்துள்ளார்.காட்டுக்குள் தனியாக மாட்டிக்கொண்ட ஒரு பெண், எப்படி காட்டிலிருந்து தப்பிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.
இந்த படத்திற்காக’ கிராம கா ‘என்ற தற்காப்பு கலையை அமலாபால் கற்றுக் கொண்டதாக இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தற்காப்பு கலை கற்றுக் கொண்டதால் எனது நிஜ வாழ்க்கையில் நான் தனியாக பயணம் செய்து,
எங்கேயாவது மாட்டிக் கொண்டாலும் நான் தப்பித்து விடுவேன் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்துள்ளது.மேலும் நீங்கள் திரைப்படம் இயக்குவது எப்பொழுது என கேட்ட கேள்விக்கு, நான் முதலில் உலகத்திலேயே சிறந்த நடிகையாக ஆக வேண்டும் பின்பு தான் எல்லாமே என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.