தமிழ் சினிமாவில் காமெடியனாக வெற்றி வகை சூடி வலம் வந்தவர் சந்தானம். 1999 ஆம் ஆண்டு டீ கடை பெஞ்சு என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். 2001 முதல் 2004 வெளிவந்த லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் திரை உலகில் கால் பதித்தார்.
2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹீரோவாக நடித்து வெற்றி வகை சூடி வலம் வருகிறார்.
சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. தற்போது இவரது நடிப்பில் ‘டகால்டி’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார். யோகிபாபு, ராதாரவி, சந்தான பாரதி, மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜனவரி 31ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதே தேதியில் சந்தானம் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக வெளியாகமல் இருந்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.