தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த ஒருவாரமாக சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வந்தது. விழாவில் 53 நாடுகளைச் சேர்ந்த 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘க/பெ ரணசிங்கம்‘ உள்ளிட்ட தமிழ்ப் படங்களும் திரையிடப்பட்டன.
விழாவின் முடிவில், ‘க/பெ ரணசிங்கம்’, ‘என்றாவது ஒருநாள்’, ‘சீயான்கள்’ ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ” ‘என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘சீயான்கள்’ – ஆகிய திரைப்படங்கள் சர்வதேச விருது கொண்டது பெருமிதம் தருகிறது. முதலிரு படங்களுக்கு நான் பாட்டெழுதிப் பங்கு செலுத்தியது பரவசம் தருகிறது. விரைக தமிழர்களே! இனி அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.