தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியான ஹீரோ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் ,இவர் இன்று நேற்று நாளை பட இயக்குனருடன் தற்பொழுது தனது அடுத்த படத்தை நடிக்க உள்ளார்.
சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசை அமைத்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர் என்பவர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் மூலம் அவர் தமிழில் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன் ரஜினியின் 2 .0 போன்ற படங்களில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் சுனில்ஷெட்டி போன்றோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் ’நரசிம்மா’ படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்த இஷா கோபிகர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது