திரை உலகம் மிகச் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. திறமை உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.
தியேட்டருக்கு வரும் மக்களை திருப்திப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
“ராக்கெட் ரிங்” என்ற படத்தை சொந்தமாக இயக்கி, தயாரித்து வருவதாக மாதவன் தெரிவித்தார்.
அந்த படம் ஜூன் மாதத்தில் திரைக்கு வரும். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பேசுவதற்கு ஒரு மேடை இருக்கிறது.
பொறுப்புள்ள குடிமகனாக அமைதியாக விளக்கமாக யோசித்து பேச வேண்டிய விஷயம் இது.
சரியான நேரத்தில் ஆராய்ந்து பேச வேண்டிய விஷயங்களை பேசாமல் விடுவதால் தான் இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன.
நான் இது பற்றி நிறைய பேச விரும்புகிறேன். எனவே இது பற்றி பேசுவேன். மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்கிறேன்.
தமிழகத்தில் இருந்து சென்ற பலர் இன்று உலகையே ஆண்டு கொண்டிருக்கின்றனர். எனவே, நல்ல கொள்கை, மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணத்தில் அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்’ என்று மாதவன் தெரிவித்தார்.