மலையாள நடிகையான பார்வதி கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடிப்பு அனைவராலும் பெரிது பேசப்பட்டது. அதனையடுத்து கமலுடன் உத்தமவில்லன், தனுஷுடன் மாரியன்,ஆர்யாவுடன் பெங்களூரு நாட்கள் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் பார்வதி.
மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் பார்வதி தனது அடுத்த படத்தில் நடிகர் மம்முட்டிவுடன் நடிக்கவுள்ளார். மலையாள சினிமாவில் முதல் முறையாக மம்முட்டியுடன் ஜோடி சேரவுள்ளார் பார்வதி. அறிமுக இயக்குனர் ரதீனா இயக்கும் புதிய படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக பார்வதி நடிக்கவுள்ளார். “புழு” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான் தயாரிக்கவுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.
நடிகை பார்வதி கடந்த சில ஆண்டுகளு முன்பு கேரளாவில் நடத்த சர்வதேச படவிழாவில் நடிகர் மம்முட்டி நடித்திருந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய இருந்த நிலையில் தற்போது மம்முட்டி படத்தில் நடிக்கவுள்ளது மலையாள சினிமாவில் பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.