சினிமா

காதல் திருமணம் குறித்து கயல் ஆனந்தி விளக்கம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2014-ஆம் ஆண்டு  இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான படம் ‘கயல்’. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அப்படத்தின் வெற்றி மற்றும் அவரது கதாபாத்திரத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, திரையுலகில் ‘கயல் ஆனந்தி’ என அறியப்படுகிறார். 

இந்நிலையில், சாக்ரடீஸ் என்ற இணை இயக்குனருடன் கயல் ஆனந்திக்கு அண்மையில்  திருமணம் நடைபெற்றது. மணமகன் சாக்ரடீஸ், ‘மூடர் கூடம்’ படத்தின் இயக்குனர் நவீனின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.தெலங்கானா மாநிலம், வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இத்திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். 

இந்நிலையில் ஆனந்தி முதன் முறையாக தனது நீண்டகால காதலைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில், “நீங்கள் விரும்பும் ஒருவருடன் உங்கள் வாழ்நாள் முழுவதையும் கழிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்ததும், உங்கள் வாழ்க்கையை சீக்கிரம் தொடங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்.

ALSO READ  நோயாளிகளை கவனிக்க அரசு மருத்துவமனையில் புதிய வழி !

பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தெரிந்துக் கொண்ட பிறகு, ஒவ்வொரு கஷ்டத்தையும் ஒன்றாக சந்தித்த பிறகு, ஒருவருக்கொருவர் ஆதரவுடன் இந்த உலகை வெல்ல முடியும் என்று உணர்ந்தோம். திரு. சாக்ரடீஸுடன் ஜனவரி 7-ஆம் தேதி எனது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்கள் முன்னிலையில் ஒரு சிறிய விழாவில் திருமணம் செய்துக் கொண்டது மகிழ்ச்சியைத் தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

#kayalananthi #anandhiwedding #tamilcinema #tamilmovie #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! 

News Editor

செம்பருத்தி சீரியலிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் ஜனனி…..கண்ணீர் மல்க வீடியோ…..

naveen santhakumar

“பாலியல் குற்றங்களில் இந்தியா சவூதியை போன்று செயல்பட வேண்டும்” கங்கனா வலிவுறுத்தல்..!

News Editor