பிரேமம் பட புகழ் சாய் பல்லவி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழிலும் தனுஷ் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, அதன் பின்னர் மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி அனைவரின் மனங்களையும் கவர்ந்தார் சாய் பல்லவி. அதனையடுத்து இவர் தமிழில் கடைசியாக பாவக்கதைகளில் வெற்றிமாறன் இயக்கியுள்ள அந்தாலஜி என்ற ஒரு பகுதியில் சாய் பல்லவி நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி இந்தியில் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘சத்ரபதி’ படத்தை தற்போது இந்தியில் வி.வி. விநாயக் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார்.
இதில் ஸ்ரேயா கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தக்வல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.