கே.ஜி.எஃப் 1’ படத்தின் தொடர்ச்சியாக வரும் ‘கே.ஜி.எஃப் 2’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இப்பட இயக்குனர் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘சலார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பாகுபலி புகழ் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சுருதிஹாசன் நடித்து வருகிறார்.
‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் எடுக்கப்படவுள்ள இப்படம் சலார் படத்தின் பணிகள் முடிந்த பிறகு இந்த படத்தின் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.