சினிமா

30 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னத்துடன் கைகோர்க்கும் வில்லன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ALSO READ  நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி !

இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். முதல் பாகம் அடுத்தாண்டு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபு ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர், பாபு ஆண்டனி

முன்னதாக கடந்த 1990-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ படத்தில் வில்லனாக நடித்திருந்த பாபு ஆண்டனி, தற்போது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கவர்ச்சியாக நடிக்க நான் தாயர்-நடிகை அதிதிராவ் !

News Editor

ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor

400 ரூவா கேக்க குடுத்துபுட்டு…. 4000ரூவா புடுங்கிடுச்சு….. நான் பெத்த புள்ளைங்க:சூரி

naveen santhakumar