‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு (ஜூலை 27) 53 ஆண்டுகள் நிறைவடைவதை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிவாஜி ரசிகர்களால் மறக்க முடியாத படங்களில் ஒன்று ‘தில்லானா மோகனாம்பாள்’. நாதஸ்வர கலைஞராக சிவாஜி அசத்தியிருப்பார்.
1968 ஆம் ஆண்டு ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாட்டிய போரொளி பத்மினி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மனோரமா, நம்பியார், பாலாஜி, செந்தாமரை, டி.எஸ். பாலையா என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தது. மனோரமாவுக்கு இந்தப் படம் நற்பெயரை பெற்றுத் தந்தது. அவரது நடிப்பு இதில் வெகுவாக பாராட்டப்பட்டது.
கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ‘தில்லானா மோகனாம்பாள்’ எனும் நாவலைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. கேவி மகாதேவன் இசையில் பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தது. இன்றளவும் இந்தப் பாடல்கள் கொண்டாடப்படுகிறது.