சினிமா

நான் வாழ விரும்பவில்லை – யாஷிகா ஆனந்த் உருக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘வாழ்வில் இனி எப்போதும் இந்த குற்ற உணர்வை அனுபவிப்பேன்’ என தனது தோழியின் மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள யாஷிகா ஆனந்த்.

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘ஜோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 24 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது நண்பர்களுடன் காரில் சென்ற யாஷிகா மகாபலிபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு ஆண் நண்பர்கள் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.

ALSO READ  தற்கொலைக்கு முயன்றாரா???? ரேணிகுண்டா கதாநாயகி:

இடுப்பெலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சமீபத்தில் ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் யாஷிகா.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா.

அதில்,

நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த இயலவில்லை. உயிரோடு இருப்பதே என்றென்றும் குற்ற உணர்ச்சியாக இருக்கப் போகிறது. இந்த விபத்திலிருந்து என்னை காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய உயிர்த்தோழியை என்னிடமிருந்து எடுத்துக் கொண்டதற்காக கடவுளை குற்றம் சொல்வதா என்று தெரியவில்லை.

ஒவ்வொரு நொடியும் நான் உன்னை மிஸ் செய்கிறேன் பவணி. நீ என்னை மன்னிக்கவே மாட்டாய் என்று எனக்கு தெரியும். என்னை மன்னித்து விடு. ஒரு மோசமான நிலையை உன் குடும்பத்தினருக்கு ஏற்படுத்தி விட்டேன். உன்னுடைய ஆத்மா அமைதி அடையும் என்று நம்புகிறேன். நீ என்னிடம் திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஒருநாள் உன் குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.

ALSO READ  ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தர்பார் சிறப்பு காட்சிகள்

மேலும், நான் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை. என்னுடைய ரசிகர்களும் கொண்டாட வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். அவருடைய குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள் ஏன் உருக்கமாக பதிவிட்டுள்ளார் யாஷிகா

இது ஒருபுறமிருக்க யாஷிகாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஒருசிலர் யாஷிகாவிற்கு ஆறுதல் கூறினாலும் பெரும்பாலானோர் யாஷிகாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

உங்கள் பிறந்தநாளை பற்றி இப்போ யார் கேட்டது, இந்த பதிவு இரங்கல் பதிவு போல தெரியவில்லை. உங்கள் மேல் உள்ள தவறை மறைக்க போட்ட பதிவு போல தான் இருக்கிறது என்றும் திட்டி தீர்த்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ்… porn Star மியா காலிபா எடுத்த அதிர்ச்சி முடிவு…..

naveen santhakumar

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி… ரசிகர்களுக்கு வைத்த உருக்கமான வேண்டுகோள்!

naveen santhakumar

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த பார்த்திபன் !

News Editor