கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் ‘கேஜிஎப்’ (கோலார் கோல்ட் ஃபேக்டரி).
இந்தப் படம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் Hombale Films எக்ஸிகியூட்டிங் ப்ரடியூஸர் கார்த்திக் கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
அநேகமாக தசராவிற்கு வெளியாகலாம் எனெனில் இந்தியா முழுவது கேஜிஎப் வெளியாக வேண்டும் என்பதால் அக்டோபர் 22 அல்லது 23ம் தேதிகளில் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் முழுமையாக உறுதியாகவில்லை.
எனவே சம்பர் ஹாலிடேஸ் கேஜிஎப் படம் வெளியாகாது என்று தெரிகிறது.
இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதோடு பாலிவுட் முன்னாள் நடிகை ரவீனா டாண்டனும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக ரவீனா டாண்டன் கேஜேஎப் படத்தின் பிரதமர் ராமிகா சென் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணனை அனுகியதாக கூறப்படுகிறது.