கொரட்டலா சிவா இயக்கத்தில் ராம் சரன் தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ராம்சரண் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கோவிந்த் ஆச்சர்யா’படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.
கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 152-வது படமாகும்.
ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அரங்குகள் அமைத்து, பெரும்பகுதி படப்பிடிப்பை அதிலேயே முடிக்க திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறது படக்குழு. இதில் நாயகியாக த்ரிஷா நடித்து வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இதனிடையே, இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் நக்சலைட் கதாபாத்திரத்தில் ராம் சரண் நடிப்பதாக இருந்தது. ஆனால், ராஜமவுலி இயக்கி வரும் ‘RRR’ படத்தின் நடித்து வருவதால் இதில் ராம்சரண் நடிக்க முடியாமல் போனது.
இந்த கதையில் சில மாற்றங்கள் செய்து மகேஷ் பாபு-வை இதில் நடிக்க அனுகினார்கள். அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதில் மகேஷ் பாபு மாணவர் சங்க தலைவராக நடிக்க உள்ளார்.
அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சிரஞ்சீவியுடன்-மகேஷ் பாபு கூட்டணி உறுதியாகியுள்ளது. தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு, எவ்வித தயக்கமுமின்றி சிரஞ்சீவி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதைத் தெலுங்கு திரையுலகினர் பெரும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
சிரஞ்சீவியுடன் மகேஷ் பாபு நடிக்கவுள்ளது குறித்த அறிவிப்பை, பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது.