இந்தியாவின் மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யார் எந்தெந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
ஐந்து பாகங்களாக பிரம்மாண்டமாக கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழ் மக்களுடன் நீக்கமற கலந்த ஒன்று ஆகும்
இந்த நாவலை எப்படியாவது படமாக்க விட வேண்டும் என்று எம்ஜிஆர் இந்த நாவலை நீண்ட காலமாக முயற்சி செய்தார்.
ஆனால் முடியவில்லை அதன் பின்னர் கமலஹாசன் இந்த பிரமாண்டத்தை திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவராலும் முடியவில்லை.
அதன் பின்னர் மணிரத்னம் விஜய் மகேஷ்பாபு உள்ளிட்டோரை வைத்து இந்த படத்தை எடுக்க முடிவு செய்தார். அதுவும் நிறைவேறவில்லை.
இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் துணையோடு ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகியோரின் முதன்மை கதாபாத்திரங்களாக கொண்டு பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக திரைப்படமாக உருவாகி வருகிறார்
ஜெயம் ரவி, கார்த்தி தவிர விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், பிரபு, பார்த்திபன், ரியாஸ் கான், ஜெயராம், லால், நிழல்கள் ரவி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது. அதன் பின் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
ஏறத்தாழ படம் முடிவடையும் நிலையில் உள்ளது. முக்கிய வட இந்திய நகரங்களில் மீதி காட்சிகளை படமாக்க உள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தில் யார் யார் எந்தெந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
சுந்தர சோழராக – பிரகாஷ்ராஜ்
ஆதித்ய கரிகாலனாக – விக்ரம்
ராஜராஜ சோழனாக – ஜெயம் ரவி
நந்தினி/ மந்தாகினி என இருகதாபாத்திரங்களில் – ஐஸ்வர்யா ராய்
வந்தியத் தேவனாக – கார்த்தி
குந்தவையாக – த்ரிஷா
பெரிய பழுவேட்டரையராக – சரத்குமார்
சின்ன பழுவேட்டரையராக – பார்த்திபன்
அநிருத்த பிரம்மராயராக – பிரபு
பூங்குழலியாக – ஐஸ்வர்யா லட்சுமி
வானதியாக – ஷோபிதா
கடம்பூர் சம்புவரையராக – நிழல்கள் ரவி
மலையமானாக – லால்
ஆழ்வார்க்கடியான் நம்பியாக – ஜெயராம்
சோமன் சாம்பவனாக – ரியாஸ் கான்
ரவிதாசனாக – கிஷோர்
சேந்தன் அமுதனாக – அஷ்வின் கக்குமனு
கந்தன் மாறனாக- விக்ரம் பிரபு
மதுராந்தகனாக – அர்ஜுன் சிதம்பரம்
பார்த்திபேந்திர பல்லவனாக – ரஹ்மான்
குடந்தை ஜோதிடராக – மோகன்ராம் ஆகியோர் நடித்து வருகிறார்கள்