தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பாரம் படத்திற்கு தான் போஸ்டர் ஒட்டப்போவதாக சொல்லிய மிஷ்கின் அதை நடத்தியும் காட்டியுள்ளார்.
இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் தேசிய விருது வென்ற திரைப்படம் ‘பாரம்’. இப்படம் கடந்த 21ம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பிரபல இயக்குநர் மிஷ்கின், ‘படம் ரீலிசாகும் சமயத்தில் பட விளம்பரத்திற்காக போஸ்டர் ஒட்டுவேன்’ என கூறி வியப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் சொன்னது போலவே, சொந்த செலவில் பாரம் படத்திற்காக போஸ்டர் ஒட்டியுள்ளார். அவர் போஸ்டர் ஒட்டிய புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.
இதுகுறித்து இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி கூறும் போது, ‘படத்தின் மீது மிஷ்கின் காட்டும் அன்பு விலை மதிப்பற்றது’ என கூறியுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.