மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் சாய் பல்லவி.இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்ததினால், தமிழ் தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமான இவர் படங்களிலும் நடன திறமையை நன்றாக காட்டக்கூடியவர். அதற்கு உதாரணமாக மாரி-2 வில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடல் அமைந்தது.சாய் பல்லவி, தற்போது மலையாள திரையுலகிற்கும் தெலுங்கு திரையுலகிற்கும் உள்ள வேறுபாட்டினை சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி மலையாளத் திரையுலகில் அனைவரையும் ஒரே மாதிரி சமமாக நடத்துகிறார்கள் என்றும் ஆனால் தெலுங்கு திரை உலகில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அக்கறை காட்டுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.அவரது இந்த கருத்து தெலுங்கு திரை உலகில் பிறமொழி நடிகைகளுக்கு சமமான மரியாதை கொடுப்பதில்லை என்பது போன்ற ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.