“மக்கள் எனக்கு அளிக்கும் பணத்தை எதாவது ஒரு வழியில் மக்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று உணர்ந்தேன்” என்று அறக்கட்டளை ஆரம்பித்த பூஜா ஹெக்டேவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தெலுங்கில் நடித்து வருகிறார்.
தற்போது பிரபாஸ் உடன் ‘ராதே ஷ்யாம்’, விஜய்யின் 65ஆவது படமான `பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
தமிழ், தெலுங்கை தாண்டியும் தற்போது பூஜாவுக்கு வரவேற்பு இருக்கிறது. சல்மான் கானுடன் ஒரு படம், ரன்வீர் சிங் உடன் ஒரு படம் என பிசியாக இருக்கிறார் பூஜா.
இதனிடையே, மக்கள் பணியிலும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். ‘ஆல் அபவுட் லவ்’ (All About Love) என்ற அறக்கட்டளையை தனது நண்பர்கள் உடன் சேர்ந்து துவங்கி இருக்கும் பூஜா, அதன்மூலம் நலிந்த மக்களுக்கு உதவி வருகிறார்.
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளின்போதே மக்களுக்கு தேவையான உதவிகளை தனது குழு மூலம் வழங்கி வந்தார் பூஜா ஹெக்டே. கொரோனா பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் மருத்துவ செலவு, ரேஷன் பொருட்களை வாங்கி கொடுப்பது என பல்வேறு உதவிகளை வழங்கினார்.
மக்கள் எனக்கு அளிக்கும் பணத்தை எதாவது ஒரு வழியில் மக்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று உணர்ந்தேன். அதன் விளைவுதான் இந்த அறக்கட்டளை பணிகள். அன்பு மற்றும் சேவையால் புதிய கலாசாரத்தை உருவாக்க விரும்புகிறேன்.
கொரோனா தொற்றுநோயின் எங்களது அனைத்து உதவிகளும் இந்த அமைப்பு மூலமாக தான் இருந்தது. எனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சமூகத்திற்காக சில தொண்டுகளை செய்ய ஒதுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன் என்று கூறியுள்ள பூஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.