சாத்தான்குளம்:-
சாத்தான்குளம் சிறை மரணம் தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் உரிய நீதி வேண்டும் என்று காட்டமாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர் .
கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்தாக கூறி சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்களை மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தி கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடைத்தனர். விசாரணைக் கைதிகளாக இருந்த இருவரும் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இவர்களது மரணம் தமிழகத்தையே உலுக்கியது.
பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்கள் கடையடைப்பு செய்ணனர். அதுமட்டுமின்றி காவல்துறையை கண்டித்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி ட்வீட் செய்துள்ளார்.
அதில், சட்டத்தை விட உயர்ந்தவர் எவரும் இல்லை, மனிதத் தன்மையற்ற இந்த செயலுக்கு நீதி வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல, நடிகை குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.