சினிமா

வாடிவாசலுக்கு பிறகு வசந்தபாலனுடன் கைகோர்க்கும் சூர்யா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரின்  நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சூரரைப் போற்று’. ஓடிடி தளத்தில் வெளியாகியது. அதனையடுத்து இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 நடித்து வருகிறார் சூர்யா.

அண்மையில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, சூர்யா நடிக்க உள்ள படம் ‘வாடிவாசல்’. சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார்.

இந்த நிலையில், சூர்யா நடிக்க இருக்கும் அடுத்தப் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வசந்தபாலன் சமீபத்தில் சூர்யாவை சந்தித்து ஒரு கதை கூறியதாகவும், அக்கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்துப் போக, அதில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இக்கதை வரலாற்று பின்னணி கொண்ட கதை என்றும் கூறப்படுகிறது. ‘சூர்யா 40’, ‘வாடிவாசல்’ படங்களை நிறைவு செய்த பின், வசந்தபாலன் கூறிய கதையில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Share
ALSO READ  ஷீரடியில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

93 வது ஆஸ்கர் விழாவில் விருது வென்றவர்களின் முழு விவரம் ! 

News Editor

சோனு சூட்டை கௌரவித்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்; இணையத்தில் குவியும் பாராட்டு !

News Editor

மதம் மாறியதாக வதந்தி… விஜய் சேதுபதி கொடுத்த பதிலடி

Admin