முகேஷ் திருபாய் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். முகேஷ் அம்பானி ஆடம்பரங்களின் அரசன்.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அன்டிலியா என்ற பிரம்மாண்ட வீடு,மொத்தம் 27 அடுக்குகள்,சுமார் 6 தளங்கள் மட்டும் கார்களை நிறுத்துவதற்காகவே கட்டபட்டுள்ளது.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் இந்த கார்கள், உலகின் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர மாடல்களாகும்.
முகேஷ் அம்பானி மட்டுமில்லை, அவரிடம் பணிப்புரியும் கார் ஓட்டுநர்கள் கூட நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர்கள் தான். மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் ஓட்டுநர்கள் வரை முகேஷ் அம்பானியிடம் பணிபுரிகிறார்கள்.
குறிப்பாக அவரது பிரத்யேக கார் ஓட்டுநருக்கு மற்றவர்களை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறதாம்.
முகேஷ் அம்பானி வைத்திருக்கும் கார்களை ஓட்டுவது அவ்வளவு சுலபமில்லை. அம்பானி வீட்டில் இருக்கும் கார்கள் பலவும் அதிக விலையுயர்ந்த மற்றும் நுணுக்கமான வேலைபாடுகளை கொண்ட தயாரிப்புகள்.
அம்பானிக்கு டிரைவராக பல்வேறு கடினமான முறைகள் கையாளப்படுகின்றன. முகேஷ் அம்பானி பிஎம்டபிள்யூ குண்டு துளைக்காத சிறப்பு கொண்ட 7 சீரிஸ் காரை பயன்படுத்தி வருகிறார். இது போன்ற கார்களை இயக்குவதற்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறது.
கார் ஓட்டுனரை தேர்வு செய்யும் வழிமுறைகளில் சில இதோ :
- மிக கடினமான பயிற்சி முறைகளையும், மொழிப்புலமையையும் அவர்கள் பெற்றிருப்பது அவசியம்.
- அம்பானி பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார்களில் விசேஷ தொழில்நுட்ப வசதிகள் ஏராளமாக உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அந்த கார் நிறுவனம் அளிக்கும் பயிற்சிகளில் தேர்வு பெற வேண்டும்.
- அவசர சமயத்தில் காரை கையாள்வது, அதிவேகத்தில் பின்புறமாக காரை செலுத்தும் திறன் இருக்க வேண்டும்.
- வெளிநாட்டில் உள்ள கார் நிறுவனத்தின் பயிற்சி மையங்களில் செயல்முறை மற்றும் விளக்க முறை பயிற்சிகளில் வெற்றி பெற வேண்டும்.
- அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வல்லமை அந்த ஓட்டுனர்களுக்கு இருத்தல் அவசியம்.
முகேஷ் அம்பானிக்கு ஒவ்வொரு நொடியும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றன. நடைபெறும் தொடர் தேர்வுகளில் சிறந்த ஓட்டுனர்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த ஓட்டுனர்களே பணிக்கு நியமிக்கப்படுவர்.
இதற்காக கடுமையான பல கட்ட சோதனைகளை தாண்ட வேண்டியிருக்கும். நம்பகமான, திறமையான ஓட்டுனரே தேவை என்பது அம்பானியின் கருத்து.