உத்தரப் பிரதேசம்:
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக குறிப்பிட்ட அளவிலான நபர்கள் மட்டுமே பூமி பூஜையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதில் மேடையில் 5 பேர் மட்டுமே இருந்தனர்.
அதில் கலந்து கொண்ட ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பூமி பூஜையின் போது இவருடன் பிரதமர் நரேந்திர மோடி உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்நிகழ்ச்சியில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் உடனிருந்தனர்.
பூமி பூஜை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த வளாகத்தில் இருந்த மதகுரு ஒருவருக்கும், 14காவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளது பெரும் பரபரப்பை