மும்பையில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட உள்ள ஏ.சி. மின்சார ரயிலை முதல் முறையாக பெண் ஓட்டுநர் இயக்க உள்ளார்.
இந்தியாவில் புறநகர் மின்சார ரயில்களை அதிக அளவில் உபயோகிக்கும் மாநிலங்களில் ஒன்றான மும்பையில் பயணிகளின் வசதிக்காக மின்சார ரயில்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய இரயில்வே துறை மூலமாக தானே பன்வேல் ஆகிய நகரங்களுக்கு இடையே ஏசி ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலின் ஓட்டுனராக மனிஷா மஷ்கே என்ற பெண் பணியாற்ற உள்ளார். இவர்தான் மும்பையின் புறநகர் ஏசி மின்சார ரயிலை இயக்கும் முதல் பெண் ஆவார்.இவர் கடந்த 2002ஆம் ஆண்டு சரக்கு ரயிலில் உதவி டிரைவராக பணியில் சேர்ந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு மோட்டார் பிரிவுக்கு பதவி உயர்வு பெற்றார். இதனால் கடந்த ஆண்டு முதல் மின்சார ரயில்களை இயக்கி வருகிறார்.
மின்சார ரயிலை இயக்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனிஷா மஸ்கே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவது தான் எனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.