திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கல்யாணி அணை அருகே உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்காக திருப்பதி தேவஸ்தானமும், மாநில அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்நிலையில் தேவஸ்தானத்தில் பாதுகாப்பு அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்களுக்கு நேற்று முன்தினம் பயிற்சி அளிப்பதற்காக போலீஸ் பயிற்சி பள்ளிக்குச் சென்ற 4 தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தொற்று பாதித்த 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.