இந்தியா

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லக்னோ:

உத்தரப் பிரதேச மாநிலம் திக்ரி என்ற கிராமத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் திக்ரி என்ற கிராமத்தில் நேற்று இரவு 10 மணியளவில் நூருல் ஹசனின் என்பவர் வீட்டில் LPG சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது. இதனால் இரட்டை அடுக்குமாடி வீடு மளமளவென இடிந்து விழுந்தது.இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர், இவர்கள் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

ALSO READ  2 மாத கர்ப்பிணி..3000 கிலோமீட்டரை 52 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்..என்ன காரணம்???

சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்தனர். தடயவியல் குழுக்கள் மாதிரிகளைச் சேகரித்து வருகின்றன, மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, காயமடைந்தவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாதம் 20 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு….

naveen santhakumar

சீனாவை முந்திய இந்தியா!

Admin

கண்ணாடியை ஸ்டைலாக அணிவது எப்படி என பியர் கிரில்ஸுக்கு செய்து காட்டிய ரஜினி..!!!!

naveen santhakumar