லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலம் திக்ரி என்ற கிராமத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் திக்ரி என்ற கிராமத்தில் நேற்று இரவு 10 மணியளவில் நூருல் ஹசனின் என்பவர் வீட்டில் LPG சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது. இதனால் இரட்டை அடுக்குமாடி வீடு மளமளவென இடிந்து விழுந்தது.இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர், இவர்கள் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்தனர். தடயவியல் குழுக்கள் மாதிரிகளைச் சேகரித்து வருகின்றன, மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, காயமடைந்தவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.