தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இறந்த நாயின் அஸ்தியை நியூஸிலாந்திருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்த அதன் உரிமையாளர்.
பீகார்:-
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரமோத் குமார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் வசித்து வருகிறார்.
பிரமோத் குமார் கடந்த பத்து வருடங்களாக லைக்கன் என்று பெயரிடப்பட்ட செல்ல நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில் லைக்கன் சமீபத்தில் உயிரிழந்தது.
இதையடுத்து லைக்கனை பாரம்பரிய முறைப்படி தகனம் செய்தார் பிரமோத்.
இதையடுத்து லைக்கனின் அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டுவந்த பிரமோத்குமார் அதை கங்கை நதிக்கரையில் கரைத்து இறுதி சடங்குகளை நடத்தியுள்ளார்.
நியூசிலாந்தில் இறந்த நாயின் அஸ்தி இந்தியா கொண்டுவந்து இறுதி சடங்கு நடத்திய பிரமோதின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.