பெங்களூரு
கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியூரில் இருந்ததால் கடந்த 29ம் தேதி நேரில் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. எனவே பெங்களூருவில் புனித் ராஜ்குமார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து புனித் ராஜ்குமார் சகோதரர் சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
புனித் ராஜ்குமார் மரணம் அடைந்து துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்றும் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக நடிகர் சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.