இந்தியா

பள்ளியில் கெத்து காட்டிய ஆராத்யா பச்சன்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா பச்சனுக்கு தற்போது 8 வயது. அண்மையில் நடைபெற்ற பள்ளி ஆண்டுவிழாவில் மேடையில் புடவையில் தோன்றி, ஓர் ஆற்றல்மிகு உரையை ஆற்றியிருக்கிறார் ஆராத்யா.

அந்த உரையில் தான் ஒரு புதிய உலகில் கண் விழிக்க வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதில், “நான் தான் கனவு. புதிய உலகில் புதிய காலத்தில் விழித்தெழ வைக்கும் கனவு. அந்த உலகத்தில் நான் மிகவும் பாதுகாப்பாகவும் சிரிப்போடும், மரியாதையோடும் இருப்பேன். அந்த உலகத்தில் என் குரல் ஆணவத்தால் ஒடுக்கப்படாது. உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஞானத்தோடு என் குரல் அங்கே ஒலிக்கும். அந்த உலகத்தில் மனிநேயமிக்க வாழ்க்கை என்ற புத்தகத்திலிருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்ளலாம்” என பேசியிருக்கிறார் ஆராத்யா.

ஒருபக்கம் ஆராத்யா மேடையில் தோன்றி உரையாற்ற, மற்றொரு பக்கம் ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் பூரிப்போடு மகளின் பேச்சுத்திறனை ரசித்தும் வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கும் காட்சிகள் சமூகவதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

ALSO READ  வழிதவறி வந்த சிறுமிகள் பரிசுகளுடன் பத்திரமாக வழியனுப்பி வைப்பு :

https://www.instagram.com/aishwaryaraibachchan_arbfc/?utm_source=ig_embed


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி ரூபாய் 200 மட்டுமே சீரம் நிறுவனம் அறிவிப்பு!

News Editor

RSS-க்கு கிடைத்த வெற்றி; நாட்டிலேயே முதல் முறை ஆப்பிரிக்க வம்சாவளி நபர் MLCயாக நியமனம்… 

naveen santhakumar

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்…. 

naveen santhakumar