ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா பச்சனுக்கு தற்போது 8 வயது. அண்மையில் நடைபெற்ற பள்ளி ஆண்டுவிழாவில் மேடையில் புடவையில் தோன்றி, ஓர் ஆற்றல்மிகு உரையை ஆற்றியிருக்கிறார் ஆராத்யா.
அந்த உரையில் தான் ஒரு புதிய உலகில் கண் விழிக்க வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதில், “நான் தான் கனவு. புதிய உலகில் புதிய காலத்தில் விழித்தெழ வைக்கும் கனவு. அந்த உலகத்தில் நான் மிகவும் பாதுகாப்பாகவும் சிரிப்போடும், மரியாதையோடும் இருப்பேன். அந்த உலகத்தில் என் குரல் ஆணவத்தால் ஒடுக்கப்படாது. உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஞானத்தோடு என் குரல் அங்கே ஒலிக்கும். அந்த உலகத்தில் மனிநேயமிக்க வாழ்க்கை என்ற புத்தகத்திலிருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்ளலாம்” என பேசியிருக்கிறார் ஆராத்யா.
ஒருபக்கம் ஆராத்யா மேடையில் தோன்றி உரையாற்ற, மற்றொரு பக்கம் ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் பூரிப்போடு மகளின் பேச்சுத்திறனை ரசித்தும் வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கும் காட்சிகள் சமூகவதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
https://www.instagram.com/aishwaryaraibachchan_arbfc/?utm_source=ig_embed