இந்தியா

ஆர்த்தோ டாக்டரின் தற்கொலையும்….அதற்கான காரணமும்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளா:

கேரள மாநிலம் கொல்லத்தில் இளம் ஆர்த்தோ டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமும், அந்த தற்கொலைக்கான காரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிலிகொல்லூரில் என்ற அனூப் ஆர்த்தோ கேர் என்ற மருத்துவமனையை அனூப் கிருஷ்ணா என்ற மருத்துவர் நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கிலிகொல்லூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

ALSO READ  பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

இந்நிலையில் தற்கொலை செய்துக் கொண்ட மருத்துவர் அனூப் கிருஷ்ணா செப்டம்பர் மாதம்-23 ஆம் தேதி 7 வயது சிறுமி ஒருவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சையினை மேற்கொண்டுள்ளார்.அப்போது திடீரென சிறுமிக்கு இருதய நோய் ஏற்பட எதிர்பாராதவிதமாக அவர் மரணம் அடைந்தார். இந்த உயிரிழப்புக்கு காரணம் அனூப் தான் என சமூகவலைத்தளங்களில் பலரும் குற்றம் சாட்டினர்.

மேலும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அவரை தொடர்புக் கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அனூப் வீட்டின் குளியலறை சுவற்றில் ரத்தத்தால் “சாரி” என்று எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1xbet ᐉ Ставки На Спорт Онлайн ᐉ Букмекерская Контора 1хбет ᐉ 1xbet Co

Shobika

கொரோனா பாதித்தோருக்கு மருத்துவமனைகளில் 5 ஸ்டார் ரேஞ்சில் உணவு வழங்கும் கேரளா…..

naveen santhakumar

இந்த ஊரில் எல்லோருக்குமே இரண்டு திருமணம் தான்… விசித்திர கிராமம்…

naveen santhakumar