மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முழு அடைப்புக்கு தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ டெம்போ ஓட்டுனர்கள் சங்கம், மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகளை சந்தித்தும் ஆதரவு திரட்டியுள்ளனர்.
இதையடுத்து புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோ டெம்போக்கள் இயங்காது என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளதால் பேருந்துகள், ஆட்டோ டெம்போக்கள் இயங்கவில்லை. இதேபோல, கேரளாவில் அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. எனினும் தமிழ்கத்தில் பெருமளவிலான முடக்கம் ஏதுமில்லை.